Wednesday, July 13, 2011

தென்றல்



தென்றல்'னு சன் டிவில ஒரு மெகா சீரியல். இதோட கதாநாயகி துளசி'னு ஒரு கதாபாத்திரம். துளசியோட புருஷன் தமிழ். இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது தெரிஞ்சும் தமிழ ஒரு பொண்ணு லவ் பண்ணுது. அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சு தமிழோட வாழணும்னு இந்த பொண்ணு வெறியில பல சதி வேலைகள் செய்யுது. இருங்க இன்னும் முடியில.

இந்த துளசியோட அப்பாவுக்கு இரண்டு மனைவி. முதல் மனைவி இவர பிரிந்து ஒன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கிது. அவனுக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆயிருக்கு. அவனோட முதல் மனைவிய பத்தி இன்னைக்கு எபிசோடுல காட்டல. இதுக்கே தல சுத்துது.

ம்யுட் பண்ணிட்டு பாத்தா எல்லா சீரியலும் ஒரே மாதிரி இருக்கு. எங்கம்மாகிட்ட கோவபட்டா, 'இப்பிடியே திமுரா பேசுனா, கடைசியில கோலங்கள் ஆதி மாதிரி தான் கஷ்டபடுவ' னு எங்கம்மா சாபம் விடுறாங்க. எனக்கு ஒரே பீதியாவே இருக்கு.

வீட்ல நுழைந்தவுடனே 'உன்னைய நிம்மதியா வாழ விடமாட்டன், நீ எப்படி வாழற நான் பாக்குறேன்' னு தான் சீரியல் குரல்கள் கேக்குது.
இந்த கொடுமைக்கு நான் நைட் ஷிப்ட்லையே இருந்திருப்பேன்.




No comments:

Post a Comment