Monday, July 18, 2011

Uravugal Thodarkathai Lyrics



 

 

உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறு கதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே


உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்

சுமை தாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்


உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறு கதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே


வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாணம்

நாள் ஒன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம்

சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புது புனல் கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது


உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறு கதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே



No comments:

Post a Comment